அப்பாவும் நானும் தான் மளிகை கடைக்கு கிளம்புவோம் .நன் பெரிய பையன் என்பதால் தன்னுடன் அழைத்து போவதை அப்பா வழக்கமாக வைத்து கொண்டிருந்தார் .முதலில் நடேசன் வீட்டின் வாசற்படியில் நின்றுகொண்டிருக்கும் நடேசனிடம் பத்து நிமிடம் பின் பிள்ளையார் கோயிலுக்கு அது ஒரு ஜங்ஷன் அப்பால்பத்தர் தெருவும் கஸ்துரிபாய் தெருவும் முதலில் சந்திக்கிற இடம் அங்கு தென்படும் காதிகரப்ட் மனஜேரிடம் பத்து நிமிடம் ,அதைத தாண்டி என் பாட்டி வீடு (எனக்கு எப்போதுமே சுவர்க்கம் )அதையும் தாண்டி என் பாட்டிஅதாவது என் அம்மாவின் அம்மா வின் வீடு அதை தாண்டி போபகும் பொது எனக்கு குறுகுறு வென்றிருக்கும் ,என் மமாமகன் பாபு என்னசெய்து கொண்டு இருக்கிறான் என்று ஒரு பார்வையில் பர்ர்ப்பேன் ,ஆனால் அப்பவோ விறு விறுவென்று நகர்ந்துவிடுவார் .பின் அதை தாண்டி விறு
விறு நடை சூரியனின் இளம் வெயில் சிரமமில்லாத ஒளியாகத்தான் அந்த தெருவில் இருக்கும்
கட்டிடங்களின் நிழல்கள் அது கொடுத்த தெருவின் நிசப்தம் ,தெருவில் அடுபபுஊதி நகை வேலை
செய்யும் பத்தர்கள் ,அரைத்துக்கொண்டிருக்கும் உளுந்து மண்டியின் சப்தங்கள் அதன் நியதிகள்
நாங்கள் எப்போதும் அன்பான அப்பாவிகள் என்று அறிவித்து கொண்டிரு ப்பது போல் தோன்றும்
சேட்டு வீட்டை கடக்கும்போது சேட்டிடம் இந்தியிலே பேசி பத்து நிமிடம் இப்படி மனிதர்களுடன்
அவர் கொண்டிருந்த சுவாரசியம் வாழ்கை மீது கொண்ட சுவரச்யமாகதான் இருக்கவேண்டும் .
அது தான் அவரை முன்னேற்றி கொண்டிருக்கிறது என்று கொச்சை யாக சொல்வார்.
ஒரு சின்ன கிராசிங்கில் தர்aகாசந்தும், சொமேச்வரன் கோயில் தெருவும் என் பாட்டி வீடு
இருந்த கSச்துரிப்பை தெருவில் கிராஸ் பண்ணும் ,அதை தாண்டியும் நகை வேலைக்காரர்கள்
இருப்பார்கள் ,பின் மனிவாத்தியார் பள்ளிக்கூடம் பின் பெரிய கடைத்தெரு ,அதில் திரும்பியவுடன் பெருமாள் கோயில் இருக்கும் .அதன் வாசலில் பலா சுளைகள் ,வாழய் பழங்கள்
விற்றுக்கொண்டிருக்கும் .சுக்கூர் பாய் கடையில் வெற்றிலை சீவல் வாங்கிக்கொண்டு
ராமகிரிஷ்ணம்பிள்ளை மளிகை கடையில் அடைந்து உட்ட்கருவோம் .அப்பாவுக்கு
speacial chair .வாங்கவேண்டிய சாமான்களை எல்லாம் சொல்லி முடித்தவுடன் பேங்க் லோன் சம்மந்தமான விஷயங்களை பேச ஆரம்பித்து விடுவார்கள் .எனக்கு பெரீச்சம்பசம் பப்பெரில் மடித்து சாப்பிட கொடுப்பார்கள் .மளிகைசாமான்கள் வாங்கிகொண்டு திரும்பும்போது நான்
சுக்கூர் பாய் கடையில் எனக்கும் தங்கைக்கும் ,தம்பிக்கும் பப்பிள்கம் வங்கி தரசொல்லி கேட்டு
என் சட்டை பையில் போட்டுகொண்டவுடன் பரம திருப்தியாகி விடுவேன் .திரும்பும்போது
அப்பா யாரிடம் நெடுநேரம் பேசினாலும் சகித்துகொல்வதயிருன்தது.
ஒவ்வொரு மழை காலங்களும் சுவரஸ்யம்மாயின .வீட்டின் கதகதப்பும் பின் அம்மாவின்
அரவணைப்பும் ,அப்பாவின் சுகாதாரமும்அந்த
மழை காலங்கலை அன்நியோனியமக்கின.தோட்டத்தில் மரங்களில் விதவிதமான
காளான்கள் ,நீர்பூச்சிகள் ,காகித கப்பல்கள் -நத்தைபயணங்கள் -ரேடியோ வில் ஜேசுதாசின்
பாட்டு- உன்னிடம் மயங்குகிறேன் -உள்ளத்தால் நெருங்குகிறேன் -நீண்ட சோலோ பாட்டு
படம் பதிலுக்கு பதில் என்று நினைக்கிறேன் .ஒரு அடி நீளமுள்ள PHILIPS RADIO தான் ஆனாலும்
சுருதி சுத்தமாக அந்த மழை காலங்களில் அந்த பாட்டு கேட்க ரம்மியமாக இருந்தது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக